வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை வகுக்க கூட்டு நடவடிக்கை குழு அமைக்க உத்தரவு | Order to form joint action committee to formulate a lawyer protection law

Spread the love

மதுரை: தமிழகத்​தில் வழக்​கறிஞர்​கள் பாது​காப்பு சட்​டம் குறித்து முடிவு செய்ய தலைமை அரசு வழக்​கறிஞர், வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள் அடங்​கிய கூட்​டுக்​குழு அமைக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேனி மாவட்​டம் ஆண்​டி​பட்​டியைச் சேர்ந்த வழக்​கறிஞர் சுசிக்​கு​மார் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் வழக்​கறிஞர்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வது அதி​கரித்து வரு​கிறது. 2010-ம் ஆண்​டில் இருந்து தற்​போது வரை 13 வழக்​கறிஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர்.

வழக்​கறிஞர்​களை பாது​காக்க தனி சட்​டம் அமலில் இல்​லை. கர்​நாட​கா, ராஜஸ்​தான் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் வழக்​கறிஞர்​கள் பாது​காப்​புச் சட்​டம் உள்​ளது. தமிழகத்​தி​லும் வழக்​கறிஞர்​கள் தாக்​கப்​படு​வதை தடுக்க வழக்​கறிஞர்​கள் பாது​காப்​புச் சட்​டத்தை நிறைவேற்​று​மாறு தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “மத்​திய, மாநில அரசுகளுக்கே சட்​டம் இயற்​றும் அதி​காரம் உள்​ளது. இந்த விவ​காரத்​தில் முடி​வெடுக்க மாநில அரசின் தலைமை வழக்​கறிஞர், உயர் நீதி​மன்ற அனைத்து வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​கள் அடங்​கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்​டும்.

அவர்​கள் நவ. 18 முதல் 20-ம் தேதி வரை விவா​தித்​து, வழக்​கறிஞர் பாது​காப்பு சட்​டத்​துக்​கான நெறி​முறை​களை வகுக்க வேண்​டும். அந்த நெறி​முறை​களை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை தள்​ளி வைக்​கப்​படு​கிறது” என்று உத்தர​விட்​டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *