வழக்கை வாபஸ் பெற ‘ஜனநாயகன்’ படக்குழு கடிதம்! |’Jana Nayagan’ film crew sends letter to withdraw the case!

Spread the love

இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டது.

மேலும், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கைத் திரும்பப் பெற உள்ளதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்கு, தனி நீதிபதி முன் ‘வாபஸ் பெறுவதற்காக’ என்ற தலைப்பில் விரைவில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *