சென்னை: ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் அதை திசை திருப்புவதற்காக பல்வேறு விஷயங்களைக் கையில் எடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. அப்படித்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 75 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமே, இரட்டை வாக்காளர்கள், இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் போலி வாக்காளர்களைக் களைவதுதான். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று திமுகவினரே பலமுறை சொல்லியிருக்கின்றனர். தேர்தல் முடிந்த பிறகு திருத்த பணிகளை செய்வதில் எந்த பயனும் கிடையாது.
தேர்தல் முறையாக நடக்க வேண்டுமென்றால், வாக்காளர்பட்டியல் சரியாக இருக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல்துறையின்
ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.