வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?

Spread the love

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இணைந்து தொகுதிக்குள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் தேர்தல் பரப்புரையின் இடையே கால் வீக்கம் காரணமாக வானதி சீனிவாசன் அவதிப்பட்டார்.

இதையடுத்து கோவை – அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதன் காரணமாக அவரது தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *