விசாரணையின்போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஐடி சோதனையின் போது துயரம்! | Businessman C.J. Roy shot himself to death during questioning by income tax officials.

Spread the love

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான “கான்ஃபிடன்ட் குழுமத்தின்’ (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய் (57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் இவரது நிறுவனம் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியுள்ளது. இவர் மோகன்லால் நடித்த ‘காசனோவா’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

‘பிக் பாஸ் மலையாளம்’ நிகழ்ச்சியின் ஸ்பான்சராகவும் இவரது நிறுவனம் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வருமான வரித்துறையினர் இவரை கண்காணித்து வந்துள்ளனர். ஜனவரி 28 முதல் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சி.ஜே. ராய்க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி அளவில், பெங்களூரின் அசோகா நகர் பகுதியில் உள்ள சி.ஜே.ராய் அலுவலகத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, சி.ஜே.ராய் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *