அவரிடம் பதில் இருக்காது
மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தால்தான் செய்திகள் வரும் என, அவரிடம் யாரோ சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனால்தான் விஜய்யை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சியும் மக்கள் மத்தியில் பெரிய கட்சியாக காட்டப்பட்டு வருகிறது. விஜய்யை அரசியல்வாதியாக நாங்கள் ஏற்கவில்லை. அவரது கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது குறித்து அவரிடம் பதில் இருக்காது. அவரது பேச்சுகளுக்கு காலை முதல் மாலை வரை பதில் கூறலாம்.

ஊடகங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். அவர் சமீபத்தில் பேசிய போது வீடுகள் தருவதாக சொல்லியிருக்கிறார். அதை கொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.கதான் பெரிய கட்சி. வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றிபெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன். தேர்தலில் போட்டியிட எனக்கு கட்சித்தலைமை வாய்ப்பு கொடுத்தாலும், பிறருக்காக பிரச்சாரம் செய்வதில் களம் இறங்குவேன்.” என்றார்.