சர்வே எடுக்க ஆட்களை கூட்டி சென்ற தவெக நிர்வாகி அட்வகேட் விஜயகுமாரிடம் பேசினேன். ’20 நாட்களாக சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறேன். தொகுதிக்குள் தவெகவுக்கு இருக்கு பெரும் செல்வாக்கை திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திட்டமிட்டு 100 ரவுடிகளை இறக்கி எங்களை தாக்கினார்கள். கட்சி விவகாரத்தைப் பொறுத்தவரை தலைமை சொல்லாமல் நான் எப்படி தேர்தல் வேலைகளை செய்ய முடியும்? தலைமைதான் மா.செ பதவியும் தொகுதியும் எனக்குதான் என்பதை உறுதியளித்து வேலை பார்க்க சொல்லியிருக்கிறது.

நீங்கள் சொல்லும் அந்த இரண்டு ராஜேஷ் மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கட்சிக்குள் கமிட்டி அமைத்து விசாரிக்கப்பட்டு அந்த கமிட்டியே அவர்களை எனக்கு ஒத்துழைப்பு வழங்க சொல்லியிருக்கிறது’ என்கிறார்.
‘திமுகவினர் தவெகவினரை தாக்கியதுதான் இங்கே பிரச்னை. ரவுடிகளை இறக்கி கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மற்றபடி எல்லா கட்சியிலும் இருக்கும் சின்னச்சின்ன மனமாச்சரியங்கள் இங்கேயும் இருக்கலாம். அதெல்லாம் சரியாகிவிடும்’ என்கிறார் தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்.
திமுகவினருக்கும் தவெகவினருக்கும் சண்டை என நினைத்து துறைமுகம் தொகுதிக்குள் காதை கொடுத்தால், ‘தவெக vs தவெக’ என புதிய கதை ஓப்பன் ஆகிறது. ‘கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்டவில்லையெனில் துறைமுகம் தொகுதியை மறந்துவிட வேண்டியதுதான்’ என்கிற லோக்கல் தவெகவினரின் குரல் தலைமைக்கு கேட்குமா?.