விஜய் சாருக்கு என் ஐடியா பிடித்திருந்தது. அது ஒரு பெரிய ஐடியா என்று அவர் உணர்ந்தார்.
விஜய் சார் என் ஸ்டைலில் ஏதாவது வேண்டும் என்று சொன்னார். ‘LKG’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களைப் போல இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். இந்தக் கதையில் (கருப்பு கதையில்) அப்படியான விஷயங்கள் இருக்கின்றன.
அதே சமயம் இந்தக் கதையில் பெரிய ஸ்டாருக்கு ஏற்ற விஷயங்களும் இருந்தன. அவருக்கும் அவை பிடித்திருந்தன. ஆனால் அப்போதுதான் அவர் அரசியலுக்கு வந்தார். அதனால் அது நடக்கவில்லை. பிறகு அதே கதையை சூர்யா சாரிடம் சொன்னேன்.

அவர் ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்தேன். சூர்யா சார் என்னை 200% நம்பினார்.
நான் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் செய்தார். அவர் என்மீது வைத்த நம்பிக்கையும், எனக்குத் தந்த சுதந்திரமும் என் பொறுப்பை இரட்டிப்பாக்கியது” என்றவர், “மூக்குத்தி அம்மன் 2 பற்றி சொன்னால், நான் ஒருபோதும் என் படங்களுக்கு சீக்வல் செய்ய நினைத்ததில்லை.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர்கள் இரண்டாம் பாகம் செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். சுந்தர் சி, நயன்தாரா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என எல்லோரும் என்னிடம் பேசினார்கள். அவர்களின் புரொடக்ஷன் என்பதால் அந்த டைட்டலை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அது முற்றிலும் வேறு படம்” எனக் கூறியிருக்கிறார்.