நட்டி, “இயக்குநர் உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன். சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம்.
அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி. இந்தப் படத்தில் நானொருவர் மீது அவதூறு (Defame) கூறுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி செய்யவில்லை.
இந்தப் படத்தின் நோக்கமே, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை அனைவரும் சிரிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.
விஜய் சாரின் தோற்றம் வரும் இடங்கள் படத்தின் சின்ன போர்ஷன்தான். அதைத் தவிர இன்னும் நிறைய லுக் நாங்கள் செய்திருக்கோம். விஜய் சார் ஒரு சிங்கம். அந்த சிங்கத்தை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.
அவரை அப்படி டீஃபேம் செய்யக்கூடிய எண்ணம் எனக்கும், எங்களுடைய படக்குழுவுக்கும் கிடையாது. படம் பார்த்தால், நாங்கள் செய்திருக்கிற விஷயம் என்னவென்று உங்களுக்கு புரியும்.” எனப் பேசியிருக்கிறார்.