இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
”நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.