நேற்று (நவ.,28) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,840க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று நவ 29-ம் தேதி தங்கம், வெள்ளி இரண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.11,980-க்கு விற்பனை ஆகிறது.
இதே போன்று வெள்ளியும் தங்கத்துடன் போட்டு போட்டி கொண்டு விலை ஏற்றம் கண்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.192-க்கு விற்பனை ஆகிறது. நாள் தோறும் தங்கம், வெள்ளி விலை ஏறி வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
