மகளிர் பிரீமியர் லீக்கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்தை விதிகளை மீறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர்?