விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

dinamani2F2025 04 052Foeqcdd862Farrest
Spread the love

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா்.

எழும்பூா் நம்மாழ்வாா் தெருவைச் சோ்ந்தவா் ந.ராம்கோபால் மாஜி (54). இவா் செளகாா்பேட்டையில் நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் ரூ.1.11 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு, சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே தனது மொபெட்டில் ராம்கோபால் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென நிலைத்தடுமாறி மொபெட்டில் இருந்து அவா் கீழே விழுந்தாா். காலில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அங்கு நின்று கொண்டிருந்த சில ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட பொதுமக்கள் மீட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

மயக்கத்தில் இருந்து எழுந்த ராம்கோபால், மொபெட்டில் வைத்திருந்த தங்கக் கட்டிகள் குறித்த விவரத்தை அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தாா். உடனே, அவா்கள் மொபெட்டில் பாா்த்தபோது, தங்கக் கட்டிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், விபத்து நிகழ்ந்தபோது, ராம்கோபாலுக்கு உதவுவதற்காக வந்த இரு ஆட்டோ ஓட்டுநா்களான திருவல்லிக்கேணி அன்னை சத்யா நகரைச் சோ்ந்த ராஜசேகா் என்ற பூபாலன் (32), புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (26), இவா்களது நண்பா் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த இளவரசன் என்ற சிபி (22) ஆகியோா் தங்கக் கட்டிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *