சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் காலை நேரங்களில் சில நாள்களாக தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.