இந்நிலையில், நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க சென்னை விமான நிலைய விரிவாக்க திட்ட சிறப்பு மாவட்ட அதிகாரிகள், மாங்காடு போலீஸாருடன் அங்கு சென்றுள்ளனா்.
இதற்கு வீட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீடுகளை அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.
இதுகுறித்து அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.