விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்: அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா? I Will fasting destroy cancer cells? Are Annamalai’s claims true?

Spread the love

ஒவ்வொரு நபரின் உடலுக்குமான ஊட்டச்சத்து தேவைகள் வேறு வேறாக இருக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக எடை இழப்பு, ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படும். எனவே, புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் உடலில் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிகிச்சையைத் தாங்கிக் கொள்ள முடியும்.

சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா?

புற்றுநோய் செல்கள் வேகமாக பல்கிப் பெருகக்கூடிவை. குளுக்கோஸ் (சர்க்கரை) மட்டும் சார்ந்து பெருகக்கூடிய கேன்சர் செல்களுக்கு இது பயனளிக்கலாம். ஆனால், அனைத்து கேன்சர் செல்களும் குளுக்கோஸை மட்டும் எடுத்துக்கொண்டு பெருகக்கூடியவை கிடையாது. காரணம், புற்றுநோய் என்பது ரத்தத்திலும் வரலாம், எலும்புகளுக்குள்ளும் வரலாம், உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். எனவே, சாப்பிடாவிட்டால் கேன்சர் செல்கள் இறந்துவிடும் என்பதைப் பொதுவான கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *