விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

Spread the love

இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான மண் குதிரைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினர்.

கீழ தொட்டியபட்டியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களால் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட சுடுமண் குதிரைகளை வான வேடிக்கை முழங்க பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் 2 கிலோ மீட்டர் தோளில் சுமந்து வந்து வேலூர் அய்யனார் கோயிலில் வைத்து பூஜை செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு வேலூர் பகுதி முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஊரே ஜொலித்தது. விழாவையொட்டி இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *