விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளரை ம.தி.மு.க-வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் வேல்முருகன் அழைப்பின் பேரில் நிருபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரித்தனர். கூட்டத்தில் சாத்தூர் ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராமன் பேசுகையில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக சில கருத்துக்களைப் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்டச் செயலாளர் தரப்பினர் ரகுராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரகுராமன் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆதரவாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோசமான வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர்.