196 அடி உயரம் உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு ஈடு இணை மண்ணுலகத்தில் ஏதுமில்லை என்றும், விண்ணுலகத்தில் உள்ள மேருமலைக்கு ஒப்பானது என்றும் கம்பர் பாடியுள்ளார்.
இத்தகைய பெருமையும் சிறப்பையும் உடைய ஆண்டாள் கோயில் கோபுரம் ஜொலிக்கும் வகையில், சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காண்பவர் கண்களைக் கவரும் வகையில் பல வண்ண விளக்குகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

பல வண்ணங்களில் ஜொலித்த கோபுரம்:
இந்நிலையில், ராஜகோபுரத்தில் வண்ண விளக்குகளை மிளிர வைத்து சோதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபுரம் பல வண்ண நிறங்களில் ஜொலித்தது. இரவு நேரத்தில் பல வண்ணங்களில் ஜொலித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.