ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த், “படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சி. பினிஷிங் ஸ்டேஜ்ல இருக்கு. படம் எப்போ ரிலீஸ்னு புரோடொக்ஷன் சீக்கிரம் சொல்லுவாங்க” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வருகிறது மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு இரண்டு கைகளையும் குவித்து, சிரித்துக்கொண்டே ‘வணக்கம்… தாங்க்யூ…’ எனப் புறப்பட்டார்.
‘நீங்களும், கமலும் நடிக்கும் படம் எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது?’ என்ற கேள்விக்கு, “ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” எனக் கூறிக்கொண்டே சென்றார்.
அவரிடம், ‘வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு ‘நோ கமெண்ட்ஸ்… நோ கமெண்ட்ஸ்…’ எனக் கூறிக்கொண்டே சென்றார்.