விவாகரத்து முதல் சொத்து விவகாரம் வரை: ஆயிஷா முகர்ஜிக்கு எதிராகத் திரும்பிய டெல்லி நீதிமன்றத் தீர்ப்பு! | From divorce to property issue: Delhi court verdict backfires against Ayesha Mukherjee!

Spread the love

இந்த உத்தரவை எதிர்த்து ஷிகர் தவான் டெல்லி குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “2012-ல் திருமணம் நடந்த சில காலத்திலேயே, தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் புகழையும் கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவேன் என்று ஆயிஷா மிரட்டி, தனது பணத்தில் வாங்கிய சொத்துக்களைத் அவரின் பெயருக்கு மாற்றக் கட்டாயப்படுத்தினார்.

இதன் அடிப்படையில் அவர் 7.46 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைத் தன்வசம் வைத்திருந்ததுடன், தவானிடமிருந்து கூடுதலாக 15.95 கோடி ரூபாய் மற்றும் ஒரு சொத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவை அனைத்தும் இந்தியத் திருமணச் சட்டங்களுக்கு முரணானவை. நான் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்படவில்லை” என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

ஷிகர் தவான் - சோபி ஷைன்

ஷிகர் தவான் – சோபி ஷைன்

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், “அச்சுறுத்தல் மற்றும் மோசடி மூலம் ஷிகர் தவானிடமிருந்து பெற்ற 5.7 கோடி ரூபாயை, 9 சதவீத ஆண்டு வட்டியுடன் ஆயிஷா முகர்ஜி திருப்பித் தர வேண்டும். ஆஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கிய சொத்துப் பகிர்வு ஒப்பந்தம் செல்லாது. தவான் மற்றும் ஆயிஷாவின் திருமணம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆஸ்திரேலிய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *