விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்!

Spread the love

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம்.

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதனருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

கடல் நடுவே அமைந்துள்ள இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இவற்றை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. அதோடு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டு பாலமும் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *