வீடுகளுக்கு வரும் திமுகவினரிடம் கேள்வி கேளுங்கள்: பொதுமக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல் | Tamilisai advises the public to ask questions to DMK members who come to your homes

1369926
Spread the love

சென்னை: வீடு​களுக்கு வரும் திமுக​வினரிடம் மக்​கள் கேள்வி​களை கேட்க வேண்​டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் கோவை சென்​றார்.

முன்​ன​தாக, சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஒரு​வர் குழந்​தையை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். சிசிடிவி காட்​சிகள் கிடைத்து 5 நாட்​கள் ஆகி​யும், இன்​னும் பிடிப்​ப​தற்கு நடவடிக்கை எடுக்​க​வில்​லை. தமிழகத்​தில் என்ன நடந்து கொண்டு இருக்​கிறது என்​ப​தை, யோசித்​தால் அனை​வருக்​கும் வேதனை​யாக இருக்​கிறது.

எதை​யும் கண்​டு​கொள்​ளாத தமிழக முதல்​வர், மக்​களு​டைய வீடு​களுக்கு செல்​லுங்​கள். அவர்​களை கட்சி உறுப்​பினர்​கள் ஆக்​குங்​கள். பாஜக, அதி​முக பற்றி அவர்​களிடம் பேசுங்​கள் என்று கூறு​வது வேதனை அளிப்​ப​தாக இருக்​கிறது. முதல்​வரின் ஒரே நோக்​கம் வரும் தேர்​தலில் 30 சதவீத வாக்​கு​களை பெறு​வது தான். திமுக​வினர் 10 நிமிடங்​கள் ஒவ்​வொரு வீட்​டிலும் போய் பேசும்​போது, மக்​கள் கேள்வி​கள் கேட்க வேண்​டும்.

அஜித்​கு​மாருக்கு என்ன ஆனது. அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் என்ன நடந்​தது. திரு​வள்​ளூரில் குழந்​தைக்கு நடந்​தது என்ன. மருத்​து​வ​மனை​களில் குழந்​தைகளை தரை​யில் படுக்க வைத்​துள்​ளது ஏன். மருத்​து​வர்​கள் இல்​லாமல் இயங்​கும் அரசு மருத்​து​வ​மனை​கள் ஏன். ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​கள் சாலை​யில் இறங்கி போராடு​வது ஏன் என்ற கேள்வி​களை, திமுக​வினரிடம் மக்​கள் கேட்க வேண்​டும்.

5 மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் ராஜி​னாமா செய்ய வேண்​டும் என்று கூறுகின்​றனர். ஊழல் காரண​மாக அவர்​கள் ராஜி​னாமா செய்ய வேண்​டும் என்​றால், அவர்​களின் ஊழலால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், அப்​பாவி மக்​கள் தானே. பாதிக்​கப்​பட்ட அந்த மக்​களுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்​கள். தேர்​தல் வரும்​போது அவசர​மாக இதை போன்ற நடவடிக்கை எடுப்​பது கவலை அளிக்​கிறது. திருச்சி சிவா காம​ராஜர் பற்றி பேசி​யதை தவறு என்று முதல்​வர் கூற​வில்​லை.

இதை இன்​றோடு விட்டு விடுங்​கள் என்று கூறுகின்​றார். பாஜக யாராவது பேசி இருந்​தால் நீங்​கள் என்ன சொல்லி இருப்​பீர்​கள். எந்த அளவு குதித்து இருப்​பீர்​கள். ஆனால் கூட்​டணி கட்சி என்​ப​தால், செல்​வப்​பெருந்​தகை​யும் மவுனம் சாதிக்​கிறார்.

காம​ராஜரை நாங்​கள் காங்​கிரஸ்​கார​ராக பார்க்​க​வில்​லை. அவர் குழந்​தைகளுக்கு கல்வி கண் திறந்​தவர். நல்​லாட்சி நடத்​தி​ய​வர். பிரதமர் மோடி பேசும் போது, நல்​லாட்​சிக்கு காம​ராஜரின் ஆட்​சியை உதா​ரணம் காட்டி பேசுகிறார்.

அந்த அளவு காம​ராஜர் மீது பாஜக மதிப்பு மரி​யாதை வைத்​துள்​ளது. கம்​யூனிஸ்​டு​களுக்கு இப்​போது உண்​டியல்​கள் தேவை​யில்​லை. பெரிய பெட்​டிகள் தான் தேவைப்​படு​கின்​றன. ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என்று திமுக கூட்​ட​ணி​யில் உள்ள செல்​வப்​பெருந்​தகை​யும், கார்த்​திக் சிதம்​பரம் பேச தொடங்கி விட்​டனர். இதனால் தி​முக கூட்​டணி வெல​வெலத்த நிலை​யில் உள்​ளது. இது குறித்து எல்​லாம் தி​முக, மக்​களுக்கு பதில் சொல்​ல வேண்​டிய நிலை​யில்​ இருக்​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *