வீட்டில் கருக்கலைப்பு செய்த பெண் பலி: கணவர், மாமனார் கைது!

Dinamani2f2024 09 252fpuqqxkrv2fabortion.jpg
Spread the love

உயிரிழந்தப் பெண் 2017 ஆம் ஆண்டு அவரது கணவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமானதால் அவர்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

அவருக்கு பிறக்கவிருந்த குழந்தை பெண் குழந்தை என்பதால் அவரது குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமானது. அதற்கு அடுத்த நாள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக இந்தாபூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இறந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாய்க்கு பாலியல் வன்கொடுமை: மகனுக்கு ஆயுள் தண்டனை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *