வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் தகவல் | Chennai Police Commissioner Arun says bomb threat did not come from abroad

Spread the love

சென்னை: வெடிகுண்டு மிரட்​டல்​கள் வெளி​நாடு​களி​லிருந்து வரவில்​லை. இங்​கிருந்து யாரோ இது​போன்ற புரளி கிளப்​பும் செயல்​களில் ஈடு​படு​கின்​றனர் என காவல் ஆணை​யர் தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக காவல் ஆணை​யர் அருண் நிருபர்​களுக்கு நேற்று அளித்த பேட்​டி: நடிகர்​கள், சினிமா பிரபலங்​கள் உட்பட பல்​வேறு தரப்​பினருக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த 7 மாதங்​களில் சென்​னை​யில் 342 மிரட்​டல்​கள் வந்​துள்​ளன. இந்த மிரட்​டல்​கள் `டார்க் வெப்’ மற்​றும் `விபிஎன்’ வழியே விடுக்​கப்​படு​கின்றன.

இது​போன்ற மிரட்​டல்​களில் பெரும்​பாலும் வெளி​நாடு​களி​லிருந்து வரு​வது​போல் தெரிய​வில்​லை. இங்​கிருந்து யாரோ செய்​வ​தாகக் கருதுகிறோம். மிரட்​டும் முறை, பயன்​படுத்​தும் வார்த்தை உள்​ளிட்​ட​வற்றை வைத்து பார்க்​கும்​போது ஒன்று அல்​லது 2 பேர் மட்​டுமே இதன் பின்​னணி​யில் உள்​ளனர். இருப்​பினும் இதை நாங்​கள் சாதா​ரண​மாக எடுத்​துக் கொள்​ள​வில்​லை.

இதுகுறித்து தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸாரும் விசா​ரிக்​கின்​றனர். விரை​வில் குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​படு​வார்​கள். சென்​னை​யில் ரவுடி பட்​டியலில் 4,979 பேரை ஏ, ஏ பிளஸ், பி, சி என 4 ஆக வகைப்​படுத்தி அவர்​கள் மீதான கண்​காணிப்பை அதி​கரித்​துள்​ளோம். இதனால், குற்​றச் செயல்​கள் தொடர்ந்து குறைந்து வரு​கின்​றன.

அதன்​படி, கடந்​தாண்டு 102 ஆக இருந்த கொலை நடப்​பாண்​டில் 82 ஆகவும், செயின் பறிப்பு 35-ல் இருந்து 21 ஆகவும், செல்​போன் பறிப்பு 275-ல் இருந்து 144 ஆகவும் குறைந்​துள்​ளது. பொது​மக்​கள் அளிக்​கும் புகார்​கள் மீதும் உடனுக்​குடன் நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. இவ்​வாறு காவல்​ ஆணை​யர்​ அருண்​ கூறி​னார்​.

நடிகர் அஜித், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல்: தமிழ்நாடு டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று வந்த இ-மெ​யிலில், அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வீடு, ஜி.பி. சாலை​யில் உள்ள மாநில காங்​கிரஸ் தலைமை அலு​வல​க​மான சத்​தி​யமூர்த்தி பவன், கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் உள்ள நடிகர் அஜித்​கு​மாரின் வீடு மற்​றும் நடிகர் எஸ்​.​வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீடு உட்பட 10 இடங்​களைக் குறிப்​பிட்டு அங்கு வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

உடனே போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் மிரட்​டலுக்​குள்​ளான இடங்​களுக்கு சென்று சோதனை நடத்​தினர். பல மணி நேர சோதனைக்​குப் பிறகும் சந்​தேகப்​படும்​படி​யான எந்​தப் பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதையடுத்​து, புரளியைக் கிளப்​பும் வகை​யில் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இந்த வெடிகுண்டு மிரட்​டல் தொடர்​பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *