1) இந்தியத் தொழிலாளர்களை ஆவணங்கள் இல்லையென்று திருப்பி அனுப்பிய அமெரிக்கா, ராணுவ விமானத்தில் கைகளையும், கால்களையும் விலங்கிட்டு, மனித உரிமையற்ற நிலையில் இந்திய எல்லைக்குள் தள்ளியது.
2) பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்ற நாடுகளை வெளிப்படையாகவே மிரட்டிய அவர், இந்தியாவிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு வரிகளை உயர்த்தினார்.
3) ஹெச் 1 விசா மீதான கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இந்திய மென்பொருள் நிறுவனங்களை நேரடியாகத் தாக்கியது.
4) அரசியல் ரீதியிலும் இந்தியாவின் தனித்தன்மையான நிலைப்பாடுகளை கேலிப்பொருளாக்கியது.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து உருவான பதற்றத்தைத் தனிக்க இருநாடுகளையும் மிரட்டிப் பணிய வைத்ததாகப் பலமுறை ஊடகங்களில் கூறினார் ட்ரம்ப்.
இது போன்ற தாக்குதல்களை கொலம்பியா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளே உறுதியான சொற்களால் கண்டித்த நிலையில், இந்தியாவிடமிருந்து நேரடியான கண்டனம் இல்லை என்பது அமெரிக்காவின் பிடி இறுகுவதையும், இந்தியாவின் தலைமையில் ஊசலாட்டம் இருப்பதையும் காட்டுகிறது. நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரையும் கவலை கொள்ளச் செய்கிறது.