வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

dinamani2F2025 08 082Fbjtsp5qi2Fmaduro083145
Spread the love

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மடூரோ என்று டிரம்ப் தலைமையிலான அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அட்டா்னி ஜெனரல் பாம் பொண்டி கூறுகையில், ‘அதிபா் ட்ரம்பின் தலைமையில், மடூரோ நீதியிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவாா்’ என்றாா்.

மடூரோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த 2020-ல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் அவா் தொடா்புடைய 70 கோடி டாலா் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *