இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறது
குரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.
குரூப் C-யில் வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.
குரூப் D-யில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நான்கு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் அணிகள் தங்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு லீக் போட்டியில் ஆட வேண்டும்.
இந்த லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளும் தலா 4 அணிகள் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்.
அதில், லீக் சுற்றைப் போலவே ஒவ்வொரு அணியும் தங்களது குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் ஆட வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.