இதைத்தொடா்ந்து அந்த குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று சந்திரசூட் தெரிவித்துள்ளாா். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு, அதனால் சந்தையில் ஏற்படும் தாக்கம் மூலம், சட்டவிரோதமான முறையில் லாபமடைவதை வைஸ்ராய் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது என்று சந்திரசூட் குறிப்பிட்டுள்ளாா்.
வேதாந்தா குழுமம் மீது வைஸ்ராய் நிறுவனம் முன்வைத்துள்ள தீவிர குற்றச்சாட்டுகள், அந்த நிறுவனத்தின் வணிகம் மற்றும் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சட்ட நிவாரணம் பெறுவதற்கான தகுதி வேதாந்தா குழுமத்துக்கு உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டது.