வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு தரவேண்டும்: அமலாக்கத் துறையிடம் நடிகர் ஸ்ரீகாந்த் கோரிக்கை | Actor Srikanth requests the ed to give him a chance to appear on another day

Spread the love

சென்னை: ​நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் பாரில் கடந்த மே மாதம் இரு தரப்​பினரிடையே நிகழ்ந்த மோதல் வழக்கின் தொடர்ச்சியாக போதைப்​ பொருட்​கள் வாங்கி பயன்​படுத்​தி​யது தொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.

இந்த வழக்​கில் வெளி​நாட்டு கும்​பலுடன் பலருக்கு தொடர்பு இருப்​ப​தால், இதில் பல லட்​சம் ரூபாய் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்​ளிட்டோர் மீது சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் தடுப்பு சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணையை தொடங்​கினர்.

அந்த வகை​யில், நடிகர் ஸ்ரீகாந்த் அக்​.28-ம் (நேற்​று) தேதி​யும், நடிகர் கிருஷ்ணா இன்​றும் (அக்​.29) நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​ துறை அலு​வல​கத்​தில் ஆஜராகு​மாறு அதி​காரி​கள் சம்​மன் அனுப்பி இருந்​தனர். ஆனால், ஸ்ரீகாந்த் நேற்று ஆஜராக​வில்​லை. இதற்​கிடையே, வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்​டும் என்று ஸ்ரீ​காந்​த்​ ​சார்​பில்​ அமலாக்​கத்​ துறையிடம்​ கோரிக்​கை வைக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *