வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம்: அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வழக்கு | ungaludan stalin petitions float in Vaigai River Case filed officer transferred

1374871
Spread the love

சிவகங்கை: திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்த விவ​காரத்​தில், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​திலிருந்து அவற்றை மர்ம நபர்​கள் திருடிச்​சென்​ற​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் வட்​டத்​துக்கு உட்​பட்ட திருப்​புவனம் பேரூ​ராட்சி மற்​றும் பூவந்​தி, கீழடி, கொந்​தகை, நெல்​முடிக்​கரை, மடப்​புரம் உள்​ளிட்ட கிராமங்​களில் நடை​பெற்ற ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களில் ஆயிரக்​கணக்​கானோர் மனுக்​களை சமர்ப்​பித்​தனர். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் காலை திருப்​புவனம் வைகை ஆற்​றில் இந்த மனுக்​கள் மிதந்​தன. இதையடுத்​து, அவற்றை வரு​வாய்த் துறை அதி​காரி​கள் மீட்​டுச் சென்​றனர். இச்​சம்​பவம் பொது​மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

இதைக் கண்​டித்து அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, பாமக தலை​வர் அன்​புமணி, நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் அறிக்கை வெளி​யிட்​டனர்.

இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி உத்​தர​வின்​பேரில், கோட்​டாட்​சி​யர் விஜயகு​மார் விசா​ரணை நடத்​தி​னார். அதில், ஆற்​றில் மிதந்​தவற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் 6, வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் பெற்ற மனுக்​கள் 7 என மொத்​தம் 13 மனுக்​களின் நகல்​களே இருந்தன என்​றும், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமில் பெறப்​பட்ட 6 மனுக்​களும் தீர்வு காணப்​பட்டவை என்​றும் தெரிய​வந்​த​தாக மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.

இதனிடையே, திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் நில அளவைப் பிரி​வில் பராமரிக்​கப்​பட்டு வந்த 13 பட்டா மாறு​தல் தொடர்​பான மனுக்​களை மர்​ம நபர்​கள் திருடிச் சென்​ற​தாக, வட்​டாட்​சியர் விஜயகு​மார் அளித்த புகாரின்​பேரில் திருப்​புவனம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர். அந்த மனுக்​களை திருடியது யார், ஆற்​றுக்​குள் வீசி​யது யார் என்​பது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் சிசிடிவி கேம​ராக்​கள் இல்​லாத​தால், அந்த அலு​வல​கத்​தில் இருந்து வைகை ஆறு வரை​யில் உள்ள கடைகளில் பொருத்​தப்​பட்​டுள்ள சிசி​விடி கேமராக்​களை போலீ​ஸார் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில், திருப்​புவனம் வட்​டாட்​சி​யர் விஜயகு​மார் இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் அலட்​சி​ய​மான முறை​யில் பணி​யாற்​றிய 7 அலு​வலர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தெரி​வித்​தா​ர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *