வைகோவால் கைவிடப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: மல்லை சத்யா அழைப்பு | Mallai Sathya calls those abandoned by Vaiko should participate in the hunger strike

1371499
Spread the love

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் தான் நடத்​தும் உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் பங்கேற்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா அழைப்​பு​விடுத்​துள்​ளார். மதி​முக துணை பொதுச் செய​லா​ளர் மல்லை சத்​யா​வுக்​கும், பொதுச் செய​லா​ளர் வைகோ மற்​றும் முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோவுக்​கும் இடையே கருத்து மோதல் அதி​கரித்து வரு​கிறது.

விடு​தலைப் புலிகள் இயக்​கத் தலை​வர் பிர​பாகரனுக்கு மாத்​தையா துரோகம் செய்​ததைப் போன்​று, தன்​னுடன் பல போராட்டங்களில் பங்​கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்​து​விட்​ட​தாக அண்​மை​யில் வைகோ குற்​றஞ்​சாட்​டி​யிருந்​தார்.

தன்னை துரோகி என்று அழைத்​ததற்கு பதில் விஷம் கொடுத்​திருந்​தால், அதை குடித்​து​விட்டு இறந்து போயிருப்​பேன் என மல்லை சத்யா பதிலளித்​திருந்​தார். மேலும் அவர் மக்​கள் மன்​றத்​தில் நீதி கேட்டு ஆக.2-ம் தேதி உண்​ணா​விரதப் போ​ராட்​டம் நடத்​தப் போவ​தாக​வும் அறி​வித்​துள்​ளார்.

இந்த உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​துக்கு அழைப்பு விடுத்து மல்லை சத்யா நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எதேச்​சா​தி​காரப் போக்​கில் துரோகப் பட்​டத்தை சுமத்தி ஒவ்​வொரு கால​கட்​டத்​தி​லும் நிர்​வாகி​களைத் தொடர்ந்து வைகோ வெளி​யேற்றி வந்​தார் என்​பதை நாடு உணர்ந்​துள்​ளது.

32 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய கட்​சியி​லிருந்து என்னை துரோகி என்று சொல்லி களங்​கப்​படுத்தி அரசி​யலிலிருந்து துடைத்​தெறிய வைகோ முயற்​சிப்​ப​தோடு, சகாக்​களை கொண்டு அவதூறு பிரச்​சா​ரம் செய்து காயப்​படுத்​துகிறார். உட்​கட்சி ஜனநாயகத்​தைப் பாது​காக்க நாளை சென்னை தீவுத்​திடல் அரு​கில் சிவானந்த சாலை​யில் காலை 9 மணி​முதல் மாலை 5 மணிவரை உண்​ணா​விரத அறப்​போ​ராட்​டம் நடத்​துகிறோம்.

கட்​சிக்​காக உழைத்து களைத்​துப் போனவர்​கள், வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் வர வேண்​டும். தலை​வனா தொண்​டனா என்று வரும்​போது தலை​வர் பக்​கமே நின்று பழக்​கப்​பட்ட பொது சமூகத்​தின் பொது புத்தி முதல் முறை​யாக ஒரு தொண்​டனின் பக்​கம் நின்று இருப்​பதை நாடு பார்த்​துக் கொண்டு இருக்​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *