”வைத்திலிங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்”- திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட கே.என்.நேரு! = vaithilingam joint dmk

Spread the love

ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம்

ஆதரவாளர்களுடன் வைத்திலிங்கம்

நாளை மதியம் சுமார் 1 மணியளவில் நடைபெறும் இணைப்பு விழாவில் வைத்திலிங்கம் தலைமையில் ரவிச்சந்திரன், காவராப்பட்டு துரை உள்ளிட்டோர் கட்சியில் இணைகின்றனர். பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என வைத்திலிங்கம் தரப்பில் சொல்லப்படுகிறது. வைத்திலிங்கம் மகன்கள் பிரபு, டாக்டர் சண்முகபிரபு உள்ளிட்ட பலர் விழா சிறப்பாக அமைவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *