ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

Dinamani2f2025 02 012fshjnik0s2findeng.jpg
Spread the love

சுனில் கவாஸ்கர் கூறுவதென்ன?

ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது சர்ச்சையானதையடுத்து, இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக புணேவில் நடைபெற்ற போட்டியில் ஷிவம் துபேவின் தலைக்கவசத்தில் பந்து பலமாக தாக்கிய பிறகும் அவர் விளையாடினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்படவில்லை. அதனால், அதன் பின் அவருக்குப் பதிலாக ஃபீல்டிங்கின்போது மாற்று வீரரை அனுமதித்ததே தவறு. பந்து தலைக்கவசத்தில் பலமாக பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவருக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட வீரர் ஃபீல்டிங் மட்டும் செய்திருக்க வேண்டும். பந்து வீசியிருக்கக் கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *