ஸ்டாலின் வருகையால், தள்ளிப்போன விஜய்யின் வேலூர் விசிட் – வேகம் காட்டும் தவெக நிர்வாகிகள்! | vijay’s visit to vellore was postponed due to stalin’s arrival

Spread the love

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்த சில சிக்கல்கள் இருந்ததால் வேறு தேதியையும் தவெக-வினர் பரிசீலித்து வந்தனர்.

இதற்காக, வேலூர்-திருப்பத்தூர் மாவட்டங்களின் எல்லைகளைப் பிரிக்கும் அகரம்சேரியில் 25 ஏக்கரிலான பிரமாண்ட வெளிப்புற மைதானம் தேர்வுசெய்யப்பட்டு, அதைச் சீரமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விஜய் வருகைக் குறித்தான தேதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

வரும் 14-ம் தேதி சனிக்கிழமை, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் தி.மு.க வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடும் நடைபெற உள்ளது.

அகரம்சேரியில் சீரமைக்கப்படும் விஜய் நிகழ்ச்சிக்கான இடம்

அகரம்சேரியில் சீரமைக்கப்படும் விஜய் நிகழ்ச்சிக்கான இடம்

முதலமைச்சர் ஸ்டாலின், அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். இதனிடையே, முதலமைச்சர் வருகைக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 13-ம் தேதியன்று விஜய்யின் நிகழ்ச்சிக்கு த.வெ.க நிர்வாகிகள் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு, காவல்துறைத் தரப்பில் இருந்து திட்டவட்டமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

எனவே தான், ஸ்டாலின் வந்துசென்ற பிறகு மூன்றாவது வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் அல்லது பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில், வேகம் காட்டுகிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *