சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து தான் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அனிமல் படத்தைத் தொடர்ந்து சந்தீப் வாங்கா இயக்கி வரும் படம் ‘ஸ்பிரிட்’. பிரபாஸ் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கின்றனர்.

2027-ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின.