உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்வதற்கு காரணமாக இருந்த ஸ்மிருதி மந்தனாவிற்கும் அவரது காதலன் பலாஷ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடக்க இருந்தது.
இதற்காக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மந்தனாவின் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் நடந்து வந்தது. ஆனால் திடீரென மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் திருமணம் தடை பட்டது.
திருமணம் தடை பட்ட அடுத்த நாளில் மந்தனாவின் காதலன் பலாஷ் குறித்து புதுப்புது தகவல்கள் பரவ ஆரம்பித்தது.
காதலன் பலாஷ் நடன இயக்குனர் ஒருவருடன் அந்தரங்க சாட்டிங்கில் ஈடுபட்டதாக கூறி அந்த சாட்டிங் விபரம் சமூக வலைத்தள பக்கத்தில் பரவியது.

இதையடுத்து, மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றிவிட்டார். அதோடு மந்தனாவின் தந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் திருமணம் தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் காதலன் பலாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து மந்தனா வெளியில் வந்துவிட்டார்.