ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! – நடந்தது என்ன?

Spread the love

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோபர்  2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பற்றாளர் அறிக்கை நகல், பிள்ளையார்குளம் ஊராட்சியில் 2020 முதல் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வரவு செலவு விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 3 மனுக்கள் அளித்திருந்தார். இந்த மனுக்களுக்கு பொது தகவல் அலுவலர் காலதாமதமாக பதில் அளித்ததுடன், ஆவணங்கள் இல்லை என பதில் வழங்கியதால் மாநில தகவல் ஆணையத்தில் அம்மையப்பன் மேல் முறையீட்டு மனு செய்திருந்தார்.

தங்க பாண்டியன்

இந்த மனு, மாநில தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்த போதும் அந்லுவலகத்தில் ஆவணங்கள் இல்லை எனத்  தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை நேரில் அழைத்து விசாரித்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  ”மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டது. எஸ்.பி விசாரணையிலும் ஆவணங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் அளித்த புகார் மனுவில், கடந்த 2023 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பணி மாறுதல் உத்தரவை செயல்படுத்தாதது குறித்த கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை தாக்கியதால் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் பொறுப்பில் இருந்த கிராம சபை புத்தகங்கள், செலவின சீட்டு விபரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் காசோலைகள் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை செய்த போது, தங்கபாண்டியன் கையாடல் மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வன்னியம்பட்டி காவல் நிலையம்

அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை திருடி சென்று விட்டாதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் முன்னாள் ஊராட்சி செயலர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து வன்னியம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.10 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *