ஹாத்ரஸில் உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

Dinamani2f2024 072f111e2f6c 38af 429b B8be 03f58dc2cf732fpti07 02 2024 000274a.jpg
Spread the love

ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், போலே பாபா தலைமையிலான ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவில் பங்கேற்ற மக்கள், திரும்பி வெளியே செல்ல முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனால், கூட்டத்தில் சென்ற சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தும் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி 120  பேர்உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத்தொகையாக அறிவித்துள்ளார்.இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *