இந்தியா 1,200 ஹெச்பி திறனுடன் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்கி வருகிறது. இது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்ழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் இருக்கும் என்பதால், இதன் உருவாக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து தயாரிப்புகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.