பாஜக எதிர்ப்பு
இருப்பினும், மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான பண்டி சஞ்சய் குமார், ரேவந்த் ரெட்டியைக் கடுமையாகச் சாடினார். “ஹைதராபாத்துக்கு மீண்டும் ‘பாக்யநகர்’ என்று பெயர் சூட்ட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“பெயர்களை மாற்றும் ஆர்வம் காங்கிரஸ் அரசுக்கு மிகவும் இருந்தால், உண்மையான வரலாறும் அர்த்தமும் உள்ள ஒன்றில் இருந்து தொடங்கலாம்” என்று அவர் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ரேவந்த் ரெட்டி “யாரெல்லாம் டிரெண்டிங்கில் இருக்கிறார்களோ” அவர்களுக்குப் பெயரிட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.