10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் | Govt aided college teachers continue protest for 10 point demands

Spread the love

சென்னை: பணி மேம்​பாட்டு ஊதி​யம் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை, அரசு உதவி​பெறும் கல்​லூரி​களின் ஆசிரியர்​கள் 3 நாள் தொடர் காத்​திருப்பு போராட்​டத்தை தொடங்​கினர். பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (ஏயுடி) மற்​றும் மதுரை காம​ராஜர், மனோன்​மணீ​யம் சுந்​தர​னார், அன்னை தெரசா மற்​றும் அழகப்பா பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (மூட்​டா) சார்​பில், அரசு உதவி​பெறும் கல்​லூரி ஆசிரியர்​களின் 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, 3 தொடர் காத்​திருப்பு போராட்​டம் சென்னை சைதாப்​பேட்​டை​யில் உள்ள கல்​லூரி கல்வி ஆணை​யர் அலு​வல​கம் முன்பு நேற்று தொடங்​கியது.

அரசு நிதி​யுதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு பணி மேம்​பாட்டு திட்ட (சிஏஎஸ்) ஊதி​யம் மற்​றும்அதற்குரிய நிலு​வைத் தொகையை உடனடி​யாக வழங்​கு​வது, யுஜிசி நெறி​முறை​களின்​படி கல்​லூரி ஆசிரியர்​களுக்கு எம்ஃபில் மற்​றும் பிஎச்டி பட்​டத்​துக்​கான ஊக்க ஊதி​யம் வழங்​கு​வது, அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது உள்பட 10 கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி, இந்த தொடர் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது.

ஏயுடி தலை​வர் பேராசிரியர் ஜெ.​காந்​தி​ராஜ் தலை​மை​யுரை ஆற்​றிப் பேசும் போது, “அரசு உதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​கள் தங்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, கடந்த 4 ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர். ஆனாலும், அரசு எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​காமல் மவுன​மாக இருந்து வரு​கிறது. தற்​போது நடை​பெறும் 3 நாள் தொடர் போராட்​டத்​துக்​குப் பின்​னரும் அரசு நடவடிக்கை ஏதும் எடுக்​கா​விட்​டால், அடுத்த கட்​ட​மாக டிச. 8-ம் தேதி முதல் கால​வரையற்ற போராட்​ட​மும், அதைத் தொடர்ந்து மாணவர்​களை ஈடு​படுத்தி போராட்​ட​மும் நடத்​தப்​படும்” என்​றார்.

போராட்​டத்​துக்கு ஆதரவு: இதற்​கிடையே, தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள அரசு உதவி​பெறும் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம், நாம் தமிழர்கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஆகியோர் ஆதரவு தெரி​வித்​துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *