மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்
ஒரு ரன்னில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித், கடைசிப் போட்டியில் விளையாடிய சிட்னி ஆடுகளம் போன்ற ஒரு கடினமான ஆடுகளத்தை ஒருபோதும் பார்த்ததில்லை எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஆட்டமிழந்த பந்து மிகவும் கடினமானதாக இருந்தது. அப்படியொரு பந்துவீச்சை எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுக்க வேண்டும் என்று விளையாடவில்லை. ஆனால், எங்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைத்துவிட்டது. சிட்னி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. இதற்கு முன்னதாக சிட்னியில் இப்படியொரு ஆடுகளத்தில் நான் விளையாடியதே இல்லை.