13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்

Dinamani2f2025 01 272ff5qbis9f2fthane Man.jpg
Spread the love

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், தாணே, டாம்பிவிலியில் கட்டடத்தின் 13வது மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை திடீரென கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பவேஷ் மத்ரே என்கிற நபர் அதனைக் கண்டார். உடனே வேகமாக ஓடிய அவர் குழந்தையை பிடிக்க முயன்றார்.

ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. அவருடைய கையில் பட்டு குழந்தை கீழே விழுந்தது. இதனால் அந்த குழந்தைக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. தற்போது இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. குழந்தையை காப்பாற்றிய பவேஷ் மத்ரேவை நிஜ வாழ்க்கையின் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *