15ஆம் நூற்றாண்டு விஷ்ணு சிலை பறிமுதல்: 7 பேர் கைது

Dinamani2f2024 08 102fxjmre6292fshrilordvishnu.jpg
Spread the love

சென்னை: 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவி ஷ்ணு சிலையை தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி தேசியநெ டுஞ்சாலையில் மேலதிருவிழாவில் ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ததில் இரண்டரை அடி உயரம் உள்ள விஷ்ணு சிலையை காவல் துறையினர் மீட்டனர்.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட வர்களில் ஒருவரான தினேஷ், தனது தந்தை நிலத்தைத் தோண்டும் போது இந்த சிலையைக் கண்டதாக தெரிவித்துள்ளார். அதே வேளையில், தனது தந்தை சிலையை கால்நடை கொட்டகையில் மறைத்து வைத்திருந்த தாக தினேஷ் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தினேஷ் சிலையை விற்க முடிவு செய்ததாகவும், அவரும் மற்ற ஆறு கூட்டாளிகளும் சிலையை ரூ.2 கோடிக்கு விற்க முடிவு செய்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணையில் தினேஷிடம் சிலை இருப்பதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்ததுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *