ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சங்கவி 185 பேருக்கும் இந்திய குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கினாா். அப்போது பேசிய அவா், ‘அண்டை நாட்டில் ஹிந்து, சீக்கியம், ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவ மதத்தினா் எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். இப்போது குடியுரிமை பெற்றவா்கள்கூட அந்நாட்டில் இருந்தபோது வீடுகளுக்கு தீவைப்பு, குடும்பத்தினா் கொலை உள்ளிட்ட கொடுமைகளைச் சந்தித்து தப்பிவந்துள்ளனா்.
185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
