டி20,டெஸ்ட், ஒருநாள் என எதுவாக இருந்தாலும் அந்த ஆடுகளத்தின் தன்மை, எல்லைக் கோடுகள், போட்டியின் தன்மைக்கு ஏற்றவாறு விரைவாக தகவமைக்க வேண்டுமென்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இது வீரர்களது திறனை பரிசோதிக்க நல்லதொரு வாய்ப்பாகும். வித்தியாசமான ஃபார்மெட்டுகளில் விளையாடுவது ஒரு வீரருக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்.
சிவப்புநிற பந்தில் அதிகமான ஓவர்கள் வீச வேண்டியிருக்கும். அது நமக்கு பொறுமையினைக் கற்றுத்தரும். ஆனால், டி20யில் பொறுமை தேவையில்லை. ஒரு பேட்டர் என்ன செய்வாரென நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டிகள் இல்லை. அதனால், நாளைக்கு வந்தபிறகுதான் மைதானம் எப்படியிருக்கிறதென கண்டறிந்து அதற்கேற்றார்போல் திட்டமிட வேண்டும். பயிற்சியாளரும் கேப்டனும் சோதனை செய்து எங்களுக்கு யோசனை அளிப்பார்கள் என்றார்.