இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 8,560-க்கும், ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,680 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 3 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.