2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு | team of officials inspects Chennai airport for Phase 2 expansion works

1370569
Spread the love

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் விரி​வாக்​கத்​துக்​காக நடை​பெற்று வரும் 2-ம் கட்ட கட்​டு​மான பணி​களை, டெல்​லியை சேர்ந்த அதி​காரி​கள் குழு நேற்று ஆய்வு செய்​தது. சென்னை விமான நிலை​யத்​தில் நாளுக்கு நாள் பயணி​களின் எண்​ணிக்​கை​யும், விமானங்​களின் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்​துக் கொண்டே வரு​கின்​றன. அந்த வகை​யில், கடந்த 2015-ம் ஆண்டு 2.2 கோடி​யாக இருந்த பயணி​களின் எண்​ணிக்​கை, 2025-ல் 3.5 கோடியை நெருங்​கி​யிருக்​கிறது.

இதையொட்​டி, சென்னை விமான நிலை​யத்தை ரூ.2,467 கோடி மதிப்​பீட்​டில் 2.36 லட்​சம் சதுர மீட்​டரில் விரிவுபடுத்த திட்​ட​மிட்​டு, அதற்​கான பணி​களை 2 கட்​டங்​களாக நடத்த இந்​திய விமான நிலைய ஆணை​யம் முடிவு செய்​தது. அதன்​படி, முதல் கட்ட பணி​கள் ரூ.1,260 கோடி​யில் 1.49 லட்​சம் சதுர மீட்​டரிலும், 2-ம் கட்ட பணி​கள் ரூ.1,207 கோடி​யில் 86,135 சதுரமீட்​டரிலும் நடத்த திட்​ட​மிடப்​பட்​டது.

தொடர்ந்​து, 2023 ஏப்​ரல் முதல்​கட்ட பணி​கள் நிறைவடைந்​து, புதிய ஒருங்​கிணைந்த முனையம் பிரதமர் மோடி​யால் தொடங்கி வைக்​கப்​பட்​டது. இதையடுத்​து, 2-ம் கட்ட விரி​வாக்​கத்​துக்​கான கட்​டு​மான பணி​கள் தொடங்கி நடை​பெற்று வரு​கின்​றன. இந்த பணி​கள் நடப்​பாண்டு இறு​திக்​குள் முடிவடைந்​து. 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்​பாட்​டுக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

இந்​நிலை​யில், சென்னை விமான நிலை​யத்​தில் புதிய ஒருங்​கிணைந்த விமான நிலைய கட்​டிடத்​துக்​காக நடந்து வரும் 2-ம் கட்ட பணி​களை, இந்​திய விமான நிலைய ஆணை​யத்​தின் தலை​வர் விபின் குமார் தலை​மையி​லான மூத்த உயர் அதி​காரி​கள் குழுவினர் நேற்று ஆய்வு செய்​தனர். அப்போது பணி​களை விரைந்து நடத்தி முடித்​து, 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் புதிய ஒருங்​கிணைந்த முனை​யத்தை செயல்​பாட்​டுக்கு கொண்டு வரவேண்​டும் என அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *