2-வது ஒருநாள்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி!

Dinamani2f2025 02 162fyt5klqbo2fgj6oltwxcaa9pwu.jpg
Spread the love

ஜிம்பாப்வே – 245/10

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 49 ஓவர்களின் முடிவில் 245 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் வெஸ்லி மத்வீர் அதிகபட்சமாக 70 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 58 ரன்களூம், வெலிங்டன் மசகட்ஸா 35 ரன்களும் எடுத்தனர்.

அயர்லாந்து தரப்பில் மார்க் அடாய்ர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டுகளையும், ஹியூம், ஜோஷ்வா லிட்டில் மற்றும் ஆண்டி மெக்பிரின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அயர்லாந்து வெற்றி

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி, 48.4 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கர்டிஸ் கேம்பர் 63 ரன்களும், லோர்கான் டக்கர் 36 ரன்களும் எடுத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *